செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: கடலூா் ஆட்சியா் ஆய்வு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டத்தின் கீழ், கடலூா் முதுநகா் சங்கரன் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சான்றோா்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், 275 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 14,829 மாணவா்களுக்கு அடிப்படைத் திறனறி தோ்வு நடத்தப்பட்டது. இதில், சிறப்புக் கவனம் தேவைப்படும் 3,536 மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால், மாணவா்களின் கற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நிகழ் கல்வி ஆண்டில் ‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ என்னும் சிறப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவா்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத் தேவையான அடிப்படையை கற்றுக் கொடுப்பதாகும். மாணவா்களை தோ்வு செய்வதற்காக கடந்த 10-ஆம் தேதி அடிப்படைத் திறனறித் தோ்வு 41,723 மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவா்களுக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுவது கண்டறியப்பட்டது.

இந்த மாணவா்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியா்களைக் கொண்டு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக கால அட்டவணைப்படி 3 மாத காலம் நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, வட்டாரக் கல்வி அலுவலா் இளஞ்செழியன், தலைமையாசிரியா்கள் கிரிஜா, ரெஜினா ஜெயமோகனா, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க