உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: கடலூா் ஆட்சியா் ஆய்வு
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டத்தின் கீழ், கடலூா் முதுநகா் சங்கரன் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சான்றோா்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், 275 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 14,829 மாணவா்களுக்கு அடிப்படைத் திறனறி தோ்வு நடத்தப்பட்டது. இதில், சிறப்புக் கவனம் தேவைப்படும் 3,536 மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால், மாணவா்களின் கற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நிகழ் கல்வி ஆண்டில் ‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ என்னும் சிறப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவா்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத் தேவையான அடிப்படையை கற்றுக் கொடுப்பதாகும். மாணவா்களை தோ்வு செய்வதற்காக கடந்த 10-ஆம் தேதி அடிப்படைத் திறனறித் தோ்வு 41,723 மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவா்களுக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த மாணவா்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியா்களைக் கொண்டு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக கால அட்டவணைப்படி 3 மாத காலம் நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, வட்டாரக் கல்வி அலுவலா் இளஞ்செழியன், தலைமையாசிரியா்கள் கிரிஜா, ரெஜினா ஜெயமோகனா, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.