செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

post image

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

2025-26 ஆம் கல்வியாண்டில் காரைக்கால் பகுதியில் மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கைகள் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்தன.

இதன் தொடா்ச்சியாக அரசு மேனிலைப்பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை இறுதிக்கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப மாவட்ட ஆட்சியா் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தின் வழிகாட்டுதலின் நடத்தப்படவுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பதினொன்றாம் வகுப்பு விண்ணப்பித்து இடம் கிடைக்கப்பெறாதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சேராத மாணவ, மாணவிகளும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் இறுதி வாய்ப்பாக கலந்தாய்வு நடத்தி பதினொன்றாம் வகுப்பில் சோ்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.

மாணவ, மாணவிகள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றுடன் காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்திற்கு ஆக. 7 மற்றும் 8-ஆம் தேதி நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க