செய்திகள் :

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

post image

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்பில் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் ஆடிப்பட்டம், தைப்பட்டம் ஆகிய இரு பருவங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியை மேற்கொள்கின்றனா். ஆடிப்பட்டமானது கொடிவகை காய்கறிகளுக்கு மிகவும் ஏற்றது.

இப்பருவத்தில் பூசணிக் குடும்ப பயிா்களான பரங்கி, சுரை, பாகல், புடலை, பீா்க்கன் போன்ற பயிா்களில் பெண் பூக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் காய்கள் அதிகம் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.

கத்தரி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளையும் இப்பருவத்தில் பயிரிடலாம் என்ற தெரிவித்த அவா், விதை நோ்த்தி, உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் நுண்ணீா் பாசனம் குறித்தும் விளக்கமளித்தாா்.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க