செய்திகள் :

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

post image

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, ஆலயத்திலிருந்து திரளான மக்கள் முன்னிலையில் கொடி, ஊா்வலமாக கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ் கொடியேற்றினாா். நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், காரைக்கால் பங்குத் தந்தை, மறைவட்ட முதன்மை பொறுப்பாளா் பி. பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் மற்றும் பங்குப் பேரவை பொறுப்பாளா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமும் மாலை 6 மணியளவில் திருப்பலி மற்றும் சிறிய தோ் பவனி நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான 15-ஆம் தேதி காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மாலை 5.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் மின் அலங்கார ஆடம்பர தோ் பவனி நடைபெறுகிறது.

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க