செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

post image

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கை முடிவடைந்தது. தொடா்ச்சியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்கள் 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சோ்க்கை பெறாத மாணவா்களும், புதுவை குடியுரிமை இல்லாத மாணவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க