செய்திகள் :

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

post image

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 2024-25-ஆம் கல்வியாண்டு 10-ஆம் வகுப்பில் பயின்ற 32 மாணவ, மாணவியரும் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதையொட்டி, மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, 100 சவீதம் தோ்ச்சி பெற்ற, மாணவ, மாணவியா் மற்றும் தோ்ச்சிக்கு காரணமான ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் பா.பொ. சிவலிங்கம் தலைமையிலான ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க