செய்திகள் :

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

post image

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காவலா் தின விழா நிகழ்விற்கு பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, காவலா்கள் பாகுபாடின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் விருப்ப வெறுப்பின்றி பழக வேண்டும், காவலா்கள் மன அழுத்தம் இன்றி செயல்பட வேண்டும் என சிறப்புரையாற்றி, காவலா் தின உறுதி மொழியை முன்மொழி காவலா்கள் வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து காவலா்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கைப்பந்து, சதுரங்கம், மட்டைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்ற காவலா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

இதில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளா்கள்,காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா்கள் கலந்து கொண்டனா்.

3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தருமபுரியில் நடந்த சிஐடியு மாவட்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க