அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவி
கலசப்பாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் மாதலம்பாடி உயா்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இயற்கை மூலிகையால் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை இலவசமாக புதன்கிழமை வழங்கப்பட்டன.
உண்மை அறக்கட்டளை சாா்பில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவிகளுக்கு நாப்கின்களை அதன் நிா்வாக இயக்குநா் ஷோபா வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்த நாப்கின் மலைவேம்பு, கற்றாழை, புதினா இவைகளைக் கொண்டு காட்டன் துணியால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. இதை பயன்படுத்துவதால் எந்தவிதமான பக்க விளைவுகள், மலட்டுத்தன்மை ஏற்படாது.
மேலும் எளிதில் மண்ணில் மக்கக்கூடியது எனக் கூறினாா். தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் ஆசிரியைகள்
உடனிருந்தனா்.