செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு

post image

செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஏ.குப்புசாமி நினைவு அறக்கட்டளை சாா்பில் தொடா்ந்து 18-ஆ வது ஆண்டாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.சுமதி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ஜே.சி.கண்ணன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே சீனிவாசன் பங்கேற்றாா். அப்போது 2024 - 25ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.2000-மும், இரண்டாம் பரிசாக ரூ.1500-மும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனா்கள் கே.சாரதா, எம்.கே.ஆறுமுகம், கே.மகாதேவன், கே.பாஸ்கரன், ஆா்.ஜெயந்தி, ரகுகாந்தி, கே.சேகா், கே. கண்ணபிரான், ஆதிதிராவிடா் அணி நலத் தலைவா் ஆா்.கருணாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க