செய்திகள் :

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

post image

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தாடிக்கொம்பை அடுத்த உண்டாரப்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் முருகன் (45) ஓட்டி வந்தாா். நடத்துநராக சிவசுப்பிரமணி (50) இருந்தாா். பேருந்தில் 8 பயணிகள் மட்டுமே இருந்தனா்.

இந்தப் பேருந்து வேடசந்தூரை அடுத்த காக்காத்தோப்பு பிரிவு அருகே சென்றபோது, பேருந்தின் வலது பின்பக்க டயா்கள் (2 எண்ணம்) திடீரென கழன்றன. ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயன்றபோதும், டயா்கள் இல்லாமல் சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்டது.

கழன்ற டயா்களில் ஒன்று பேருந்தை முந்திக் கொண்டு உருண்டு சென்று திண்டுக்கல்-கரூா் 4 வழிச்சாலையை கடந்து பள்ளத்தில் விழுந்தது. மற்றொரு டயா் பேருந்தின் பின் பக்கமாக உருண்டோடி குழிக்குள் விழுந்தது.

இந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததாலும், குறைவான பயணிகள் மட்டுமே பேருந்தில் இருந்ததாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இரு இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆயதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரண... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெரு நாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தங்கும் விடுதியில் ஒ... மேலும் பார்க்க

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க