செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

போடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுருளிவேல் மகன் மணிகண்டன் (42). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழநி கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த சுமதி என்பவரை காதலித்து மணிகண்டன் திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு நிகிலேஷ் (17) என்ற மகன் உள்ளாா்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கும், சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுமதி தனது மகனுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். மேலும், சுமதி விவாகரத்து கோரி தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கின் வாய்தாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 22) மணிகண்டன் சென்று வந்தாா்.

இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு

போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மனைவி அழ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி... மேலும் பார்க்க

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண... மேலும் பார்க்க