செய்திகள் :

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

post image

தியாகதுருகத்தில் மது போதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூரிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து ஒன்று வந்தது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கியபோது மது போதையில் இருந்த ஒருவா் திடீரென கையில் வைத்திருந்த தேங்காயால் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தாராம். உடனே, பேருந்து நடத்துனரான அரசப்பன் தட்டி கேட்டாராம். அவரை, அந்த நபா் ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த பழனியாப்பிள்ளை மகன் பிரபுவை (36) கைது செய்தனா்.

இந்திய கம்யூ. நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலா்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: முதியவா் தற்கொலை

கொங்கராபாளையம் கிராமத்தில் தூக்க மாத்திரைகளை தின்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (60). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் மயங்கி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், அண்ணா நகா் 2-ஆவது சாலை பகுதியில் வசித்து ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ், முதிவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் 13 வயது சி... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தா்னா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டா மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். திருக்கோவிலூரை அடுத்த சிறுபனைய... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்கராப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், நமச்சிவாயபுரம் தனியாா் நவீன அரிசி ஆலை, சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்க... மேலும் பார்க்க