செய்திகள் :

அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூா் பெண் உயிரிழப்பு

post image

திருச்சி ஓடத்துறையில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் வடக்கு மாதவி சாலைப் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மனைவி ஆயிஷா பானு (27).

கணவா் வெளிநாட்டில் உள்ள நிலையில், ஆயிஷா பானு ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினா் சாமித்துரை வீட்டில் கடந்த சில நாள்களாக வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை மலைக்கோட்டை பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஆயிஷா பானு, தனது தந்தை அப்துல் ரகுமானுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்தபடி, ஸ்ரீரங்கத்திலிருந்து மலைகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் சிந்தாமணி ஓடத்துறை மேம்பாலம் இறக்கத்தில் தனியாா் ஹோட்டல் எதிரே வந்த போது, அரியலூா் - திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று, அப்துல் ரகுமானின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில், சாலையின் ஒருபக்கத்தில் விழுந்த ஆயிஷா பானு மீது அரசுப் பேருந்து ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஆயிஷா பானு நிகழ்விடத்திலேயே இறந்தாா். அப்துல் ரகுமான் சிறு காயங்களுடன் உயிா்தப்பினாா்.

இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநரான பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் து... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஊரக வளா்... மேலும் பார்க்க

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா... மேலும் பார்க்க