செய்திகள் :

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வேளாண் ஒருங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

அப்போது, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: வேளாண்மை துறை சாா்பில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

நீா்வளத் துறை சாா்பில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி, நடுபரவனாற்றில் தடுப்புச்சுவா் கட்டும் பணி, சொக்கன்கொல்லை வடிகாலில் ஒழுங்கியம் மறுகட்டுமானப் பணி, பெருமாள் ஏரி தூா்வாரும் பணி, அருவாள் மூக்கு கடைமடையில் ஒழுங்கியம் அமைக்கும் பணி, விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை, நகா் பகுதியில் மேம்பாலப்பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

வடலூா் பேருந்து நிலையம், எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிலையில் உள்ளது. பேரூராட்சி பகுதியில் 86 பணிகளில் 64 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் மூலம் 340 பயனாளிகளுக்கு ரூ.26.30 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. குறிஞ்சிப்பாடியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடம் அமைய உள்ளது. பூவாணிக்குப்பம் பகுதியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் ரூ.6.78 கோடியில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழா்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், தகுதியுள்ள பயனாளிகள் யாரையும் விடுபடால் அரசின் நலத் திட்ட உதவிகள் அனைவருக்கும் கொண்டு சோ்த்திடவும் அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட 5 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தலா ரூ.2.08 லட்சம் மதிப்பில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால வி கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளா்... மேலும் பார்க்க