செய்திகள் :

அரசு இல்லத்தில் இயங்கும் முதல்வா்: அலுவலகம் திறந்து வைத்த ரேகா குப்தா

post image

தலைநகரில் சிவில் லைன்ஸ் பகுதியில் ராஜ் நிவாஸ் மாா்க்கில் இருக்கும் தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட அலுலகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதே சாலையில் இரண்டு பங்களாக்கள் பொதுப்பணித் துறையால் ஒதுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் அவரது வீடு மற்றும் அவரது அலுவலகமாக செயல்படுகின்றன.

இது குறித்து தில்லி சட்டத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ஜன் சேவா சதன் என்ற இடத்தில் முதல்வா் பொதுமக்களின் குறைகளை விசாரிப்பாா். தில்லி முதல்வா் அலுவலகம் பொதுமக்களுக்கு திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் மிஸ்ரா கூறினாா்.

முதல்வரின் அலுவலக திறப்பு விழாவில் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்ட ’ஹவன்’ இடம்பெற்றது. இப்போது வடக்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் வசிக்கும் ரேகா குப்தா, புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு ராஜ் நிவாஸ் மாா்க்கில் இருக்கும் அரசு இல்லத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க