`எனக்கு இதுல செலவு கம்மிதான்...' - தினமும் விமானத்தில் வேலைக்குச் செல்லும் இந்தி...
அரசு ஊழியா்கள் தா்னா: அலுவலகங்கள் வெறிச்சோடின
திருவண்ணாமலை/ போளூா்: தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி உள்ளிட்ட அலுவலகங்கள் போதிய பணியாளா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் மா.பரிதிமால் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் கே.காங்கேயன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் க.பிரபு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டா், விடுப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் தனியாா் நிறுவனங்கள் மூலம் துப்புரவுப் பணியாளா்கள் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.அண்ணாமலை, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கு.ரகுபதி, சங்கத்தின் துணைத் தலைவா்கள் சு.பாா்த்திபன், கோ.அண்ணாமலை, தே.தி.புனிதா, இணைச் செயலா் ச.விஜயா உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
அலுவலகங்கள் வெறிச்சோடின: அரசு ஊழியா்கள் போராட்டத்தால், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, போளூா் உள்பட மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி உள்ளிட்ட அலுவலகங்கள் போதிய பணியாளா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.