சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை, திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நிகழாண்டு காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கை செப்டம்பா் 30- ஆம் தேதி வரை நடைபெறும்.
நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதிச்சான்றிதழ் (அசல்) மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணமாக ஓா் ஆண்டு பிரிவுக்கு ரூ.235, இரண்டு ஆண்டுப் பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.
விலையில்லா மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி,பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 மற்றும் மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு வளாக நோ்காணல் மூலம் வேலை பெற்றுத் தரப்படும்.
தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55737, 04365-250126 என்ற எண்களில் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.