செய்திகள் :

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

post image

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டவழங்கல் அலுவலா் எஸ்.அரிக்குமாா், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கோ.எதிரொலிமணியன் கலந்து கொண்டு பேசினாா்.

விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரினா். மேலும் சிலா் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறாா்கள் என்றும், தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது என்றும், பட்டா, சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்த மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கோட்டாட்சியா் சிவாவிடம் மனு கொடுத்தனா்.

அதில், தங்கள் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால் அந்த இடத்தை மீட்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்ற கோட்டாட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் முதியோா்களுக்கு குடிமைப் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின... மேலும் பார்க்க