செய்திகள் :

அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்

post image

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இதனிடையே, தனது மகளின் மருத்துவ காரணங்களுக்காக புதிய வீட்டை பிரத்யேகமாக உள்வடிவமைப்பு செய்து வருவதால் தாமதம் ஏற்பட்டதாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, பார் அண்ட் பெஞ்ச் இணையதள செய்திக்கு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது,

“வீடு முழுவதும் உள்ள பொருள்களை புதிய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 நாள்களில் இந்த பணிகள் நிறைவடையும், அதிகபட்சம் இரண்டு வாரங்கள் ஆகலாம்.

எனது இரு மகளுக்கும் 16 மற்றும் 14 வயதாகிறது. அவர்களின் தனியுரிமைக்காக கழிப்பறை மற்றும் வீட்டின் பிற பகுதிக்கு சக்கர நாற்காலி செல்லும் வகையில் புதிய வீட்டை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது.

ஒப்பந்ததாரர் ஜூன் இறுதிவரை உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் எனக் கூறியதால், அப்போதைய தலைமை நீதிபதியிடன் கடிதம் அளித்து தங்குவதற்கு ஒப்புதல் பெற்றிருந்தேன்.

எங்கள் வீட்டில் சிறிய ஐசியூ அமைப்பு உள்ளது. எனது மகளுக்கு நள்ளிரவில் உடல்நிலை மோசமடைந்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மட்டுமே அவளது நிலைமை தெரியும்.

வீட்டிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மாற்ற வேண்டும் என்பதால்தான், 2022 இல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது, இந்த வீட்டுக்கு மாற விரும்பாமல் சிறிய வீட்டிலேயே இருந்தேன். ஆனால், முக்கிய பிரமுகர்கள் பலர் என்னை காண வருவார்கள் என்பதால் மாறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Former Chief Justice of the Supreme Court D.Y. Chandrachud has given an explanation regarding the vacating of the government bungalow.

இதையும் படிக்க : தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?

சீனாவிடம் உதவி பெற்றோமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி மறுப்பு

இந்தியா உடனான மோதலின்போது எவ்வித வெளிப்புற உதவிகளையும் பாகிஸ்தான் பெறவில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி அஸிம் முனீர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் கு... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்

சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரை விட அதிக ப... மேலும் பார்க்க

தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!

திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 16... மேலும் பார்க்க

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று... மேலும் பார்க்க

18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பா... மேலும் பார்க்க