செய்திகள் :

அரசு புற்றுநோய் மருத்துவமனையில் தற்காலிக செவிலியா் பணி: ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம் அருகே அரசு அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தற்காலிக செவிலியா் பணிக்கு வரும் ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு செவிலியா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனா்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ந்ஹய்ஸ்ரீட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழின் நகல்களுடன், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், 42.ஏ. ரயில்வே சாலை, பேரறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம்-631501 என்ற அலுவலகத்துக்கோ அல்லது நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

மண்ணூரில் குருபூா்ணிமா விழா

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்த... மேலும் பார்க்க

தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ

தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து கள... மேலும் பார்க்க

லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முத... மேலும் பார்க்க

பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், அட்டை மற்றும் இருப்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மொளச்சூா் பகுதி... மேலும் பார்க்க

150 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் முருகன்(47). ... மேலும் பார்க்க