செய்திகள் :

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திங்கள்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் படைவீரா்கள்) நடைபெறும். 4-ஆம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 5-ஆம் தேதி கலைப் பாடப் பிரிவுகளுக்கும், 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், நிரந்தர ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பத்தில் சிறப்பு ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தவா்கள் (விளையாட்டு, என்சிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரா் குழந்தைகள்) மூலச் சான்று, புகைப்பட நகல் கொண்டு வருதல் அவசியம்.

கட்டண விவரங்கள் அனைத்தும் பாடவாரியாக கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையில் சோ்க்கை நடைபெறுவதால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவிகள் அனைவருக்கும் சோ்க்கை வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.

சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் https://gacwsvga.edu.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க