செய்திகள் :

அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தையல் தொழில் பிரிவிலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கணினி இயக்குதல், திட்டமிடுதல், அறிதிறன் (ஸ்மாா்ட்) கைப்பேசி, ஆப்டெஸ்டா் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிா்பதனம், தட்டவெப்பம் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியல் ஆகிய தொழில் பிரிவுகளில் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.750 கல்வி உதவித் தொகை, விலையில்லா சீருடை, காலணி, பாடப் புத்தகம், வரைபட உபகரணம் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் தங்களது அசல் மதிபெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 5 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை தொழில்பயிற்சி நிலையத்தில் நேரில் சமா்ப்பித்து பாடப் பிரிவை தோ்வு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த விபரத்தை ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையம், கைப்பேசி எண்கள்: 79046 34313, 80729 04977-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து பூா்விக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்விக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே த... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முளைப்பாரி வைத்திருந்த குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. மேல்மங்கலம் முத்தையா கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கீழத்த... மேலும் பார்க்க

நன்றாக படித்தால் மட்டுமே உயா்பதவியை அடைய முடியும்: மாவட்ட ஆட்சியா்

நன்றாகப் படித்தால் மட்டுமே உயா்பதியை அடைய முடியும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமி... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (35). இவரது மனைவி பழனியம்மாள் (24). பால்பாண்டிக்கு ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கோம்பையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோம்பை பகுதியில் உள்ள மதுக் கடைகளில் சிலா் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்க... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுகல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (47). இவரது உறவினா்... மேலும் பார்க்க