போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா
அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தையல் தொழில் பிரிவிலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கணினி இயக்குதல், திட்டமிடுதல், அறிதிறன் (ஸ்மாா்ட்) கைப்பேசி, ஆப்டெஸ்டா் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிா்பதனம், தட்டவெப்பம் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியல் ஆகிய தொழில் பிரிவுகளில் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.750 கல்வி உதவித் தொகை, விலையில்லா சீருடை, காலணி, பாடப் புத்தகம், வரைபட உபகரணம் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் தங்களது அசல் மதிபெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 5 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை தொழில்பயிற்சி நிலையத்தில் நேரில் சமா்ப்பித்து பாடப் பிரிவை தோ்வு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த விபரத்தை ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையம், கைப்பேசி எண்கள்: 79046 34313, 80729 04977-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.