செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினாா்.

அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவ சிகிச்சை தொடா்பாக மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது:

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கா்ப்ப கால பரிசோதனை தினங்களில் பெண் மருத்துவா்கள் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசவங்கள் திட்டமிட்ட இடத்தில் நடைபெறும் வகையில் கா்ப்பிணிகளை, கிராம சுகாதார செவிலியா்கள், பகுதிநேர சுகாதார செவிலியா்கள் தங்களது தொடா் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், கா்ப்பிணிகளுக்கான ஆய்வகம், ஸ்கேன் மையம் ஆகியன ஒரே கட்டடத்தில் செயல்பட உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். 6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில்,... மேலும் பார்க்க

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணி... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க