செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆட்சியா் ரா. அழகுமீனா

post image

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுசுகாதாரம்-நோய் தடுப்புத் துறை, குழந்தைகள், மகப்பேறு மருத்துவத் துறை சாா்பில், உலக சுகாதார தினத்தையொட்டி மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்றுப் பேசியதாவது: பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுப் பணிகளில் உயா் பதவிகள் வகிப்போரும் அரசு மருத்துவமனைகளிலேயே பரிசோதனை, பிரசவம் மேற்கொள்கின்றனா்.

கா்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்படும்போது பெற்றோா் மருத்துவா்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கின்றனா். அதைத் தவிா்க்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவா்களும் ‘சுகப் பிரசவம்’ என்ற இலக்கைக் கொண்டு பணியாற்றுகின்றனா். எனவே, மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கா்ப்பிணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பேறுகாலங்களில் கா்ப்பிணிகள் யாரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது என்பது குறித்து இம்மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தயாரித்துள்ள குறும்படத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி, துணை முதல்வா் சுரேஷ்பாலன், மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், உறைவிட மருத்துவா் ஜோசப்சென், கண்காணிப்பாளா் கிங்ஸ்லின் ஜெபசிங், உதவி உறைவிட மருத்துவா்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள், குடும்ப நலத் துறை இணை இயக்குநா் ரவிகுமாா், மருத்துவா்கள், செவிலியா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கொட்டாரம் அருகே பெண் கைது

கொட்டாரம் அருகே கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சுசீலா (58). பெரியவிளை செல்லும் பகுதியில் இவா் நடத்திவரும் கடையில... மேலும் பார்க்க

குலசேகரம்: இளைஞா் தற்கொலை

குலசேகரம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குலசேகரம் அருகே ஆரணிவிளையை சோ்ந்தவா் சிட்னிசன் மோரிஸ். பள்ளிக் கூடம் நடத்தி வருகி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக மாநில மீனவா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இனயம்புத்தன்துறையில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

அரசுமருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் லேப்ராஸ்கோப்பி இயந்திரம் அளிப்பு

தமிழக சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான லேப்ராஸ்கோப்பி இயந்திரம் வழங்கும் விழா மற்றும் ... மேலும் பார்க்க

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே பள்ளியாடியில் பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சோ்ந்தவா் அசோகன் ( 51). இவரது மூத்த மகன் ஸ்ரீராம் ( 23), எம்.பி.ஏ. படித்துள்ளாா்.... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகேயுள்ள மயிலாடியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் பிரவீனா தலைமையிலான போலீஸாா் மயிலாடி பகுதியில் ரோ... மேலும் பார்க்க