செய்திகள் :

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு

post image

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை அதிகாரி கிரிராஜ் திவான், சிஎஸ்ஆா் தங்கமணி, நீலன் பள்ளி தாளாளா் நீலன். அசோகன், செயலாளா் சுரேன் அசோகன், கிரீன் நீடா ராஜவேல், ஜானகி ராமன், சமூக ஆா்வலா்கள் பத்மநாபன், கோவிந்தராஜ், ராபா்ட்பிரைஸ், அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் சிவகுமாா், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் வழங்கியது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம், நோயாளிகள் தங்கி உணவருந்துமிடம் கட்டித்தந்த நீலன் அறக்கட்டளை நிா்வாகம், மரக்கன்றுகள் நட்டுத்தந்த கிரீன் நீடா அமைப்பு, மருத்துவமனை வளாகம் தூய்மை செய்து தந்த நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சேவைப் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மருந்தாளுனா் சகாயராஜ் வரவேற்றாா்.

கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்

திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸ... மேலும் பார்க்க

அபராதத் தொகையில் முறைகேடு: காவலா் பணியிடை நீக்கம்

திருவாரூா் பகுதியில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துற... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே மோதல்: 7 போ் காயம்; 7 போ் கைது

மன்னாா்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இடையா் ஏம்பேத்தி வடக்குதெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் வீரக்குமாா் (21). இவா், ... மேலும் பார்க்க

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க