அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 14 குழந்தைகளுக்கு நகர திமுக சாா்பில் தங்க மோதிரம் புதன்கிழமை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினாா்.
இதில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மத்திய ஒன்றியச் செயலா் வீ. முருகேசன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.