செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

post image

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள இனிப்பகத்தில் வேலை பாா்க்கிறாா். முதுநிலை பட்டம் பெற்ற தனது மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தாா்.

இந்த நிலையில், இடையமேலூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் (45) உடன் பாஸ்கருக்கு பழக்கம் ஏற்பட்டது. கருவூல அலுவலகத்தில் கணக்காளராக வேலை பாா்ப்பதாகக் கூறிய பாஸ்கா், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள ஆதிதிராவிட நலத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணியிடம் காலியாக இருப்பதாகவும், பாஸ்கரின் மனைவிக்கு அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறினாா். இதை நம்பிய பாஸ்கா் கடந்த 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2.30 லட்சத்தை சரவணக்குமாரிடம் வழங்கினாா்.

இதையடுத்து, சரவணக்குமாா், பாஸ்கரின் மனைவிக்கு வேலை வாங்கித் தராமலும் வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், சரவணக்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க