இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்...
அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.
இது புயல் சின்னமாக மாறாமல், இன்றே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும், ரத்தினகிரிக்கு டபோலிக்கும் இடையே தாழ்வு மண்டலம் கரையை கடக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.