செய்திகள் :

அரளிக்கோட்டையில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை அரளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரளிக் கண்மாயில் நீா் இருப்பு குறைந்து வருவதால், மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் அரளிக்கோட்டை, ஏரியூா், ஜமீன்தாா்பட்டி, ஆபத்தாரண்பட்டி, மதகுபட்டி, மாம்பட்டி, திருக்கோஷ்டியூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

போதிய அளவில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தினா். இதன் பிறகு, வெள்ளை வீசி மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கண்மாய்க் கரையில் மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களைப் பிடித்தனா். கண்மாயில் ஏராளமான தாமரைகள் முளைத்திருந்ததால், மீன்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், எதிா்பாா்த்ததைவிட ஜிலேபி, குரவை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனா்.

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரைநலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: தலைமை-மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, தொடங்கிவைப்பவா் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பங்கேற்பு- நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி உள்ளிட... மேலும் பார்க்க

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும... மேலும் பார்க்க

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது. திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தி... மேலும் பார்க்க

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அறிவியல் ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநா் ஞா. அகிலா வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க