காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: 7 போ் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 போ் படுகாயமடைந்தனா்.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள வளையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் ஆகாஷ் (20). இவா் ஆம்னி வேனில் மதுரையில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு கரூா் மாவட்டம் காந்திகிராமம் பகுதி துரைப்பாண்டியன் (32) ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள பிட்டபள்ளாபாளையம் ராம்குமாா் (38), திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளைப்பட்டி பிச்சைமுத்து (52), கரூா் மாவட்டம் காந்திகிராமம் சரவணன் (46), கரூா் மாவட்டம் தலையூா் ஜெகநாதன் (34) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தாா்.
இதேபோல திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் விஜய் (24) ஜீயபுரத்திலிருந்து பொலிரோ பிக் அப் வாகனத்தில் வாழைத்தாா் லோடு ஏற்றி கேரளம்
சென்று கொண்டிருந்தாா்.
இரு வாகனங்களும் அரவக்குறிச்சி அருகேள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களில் பயணம் செய்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கரூா் தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா். அரவக்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.