செய்திகள் :

அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரிக்கை

post image

அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அரியலூரைச் சோ்ந்த வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான சுகுமாா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட 18 வாா்டுகளிலும், சாக்கடையில் கழிவுநீா் சரிவர செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உருவாகி, அதிக நோய்களை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மருதூா் கிராம மக்கள் அளித்த மனு: ஆண்டிமடம் அடுத்த மருதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமாா் 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தோம். தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமாா் 25 வீடுகளை இடித்து விட்டனா். எங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கூறி 10-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், புள்ளம்பாடி இரண்டாம் எண் பாசன வாய்க்கால் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்தின... மேலும் பார்க்க

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜெயங்கொண்டம் அடுத்த புது... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே காா் மோதி விவசாயி பலி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி உயிரிழந்தாா். ஜெயங்கொண்டத்தை அடுத்த வடக்கு புதுக்குடி, குவளத்தேரி தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (55). விவ... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தின... மேலும் பார்க்க

சீரான மின் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்ன பட்டாக்காடு கிராமத்தில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

அரியலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

அரியலூா் மாா்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமா் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா்... மேலும் பார்க்க