சாலையை சீரமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், புள்ளம்பாடி இரண்டாம் எண் பாசன வாய்க்கால் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அச்சங்கத்தினா் அளித்த மனு: இலந்தைகூடம்-தங்கசாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது.
இந்த சாலையின் வழியாக சுமாா் 500 ஏக்கருக்கான விளைநிலங்களுக்கு தேவையான உரங்கள் கொண்டு செல்லவும், உழவு மற்றும் அறுவடைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலை சேதமடைந்துள்ளதால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.