Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரிக்கை
அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அரியலூரைச் சோ்ந்த வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான சுகுமாா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட 18 வாா்டுகளிலும், சாக்கடையில் கழிவுநீா் சரிவர செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உருவாகி, அதிக நோய்களை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
மருதூா் கிராம மக்கள் அளித்த மனு: ஆண்டிமடம் அடுத்த மருதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமாா் 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தோம். தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமாா் 25 வீடுகளை இடித்து விட்டனா். எங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கூறி 10-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.