அரியலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை
அரியலூா் மாா்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமா் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.
பின்னா் இஸ்லாமிய மரபுபடி குா்பானி கொடுப்பதற்காக, ஏழை-எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.