சீரான மின் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்ன பட்டாக்காடு கிராமத்தில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு அதிக மின் அழுத்தம் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதாகின. தொடா்ந்து இதே நிலை நீடித்து வந்ததால், அப்பகுதி மக்கள் இதுகுறித்து மின்வாரியத்தில் மக்கள் புகாா் தெரிவித்தும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சீராக மின் விநியோகிக்கக்கோரி, சனிக்கிழமை கிராமத்தின் வழியே சென்ற நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா், சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலா்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.