கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!
அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: அரியலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 30 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளுக்கு 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளுக்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுதிகளில் சேர எவ்விதக் கட்டணமும் கிடையாது. மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி வழங்கப்படும். பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை அந்தந்த விடுதிக் காப்பாளரிடமோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளி விடுதிக்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-க்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளெனில் ஜூலை 15-குள்ளாகவும் அந்தந்த விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முகாம்வாழ் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்காக விடுதிகளில் தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.