செய்திகள் :

பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

post image

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: அரியலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 30 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளுக்கு 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளுக்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விடுதிகளில் சேர எவ்விதக் கட்டணமும் கிடையாது. மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி வழங்கப்படும். பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை அந்தந்த விடுதிக் காப்பாளரிடமோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி விடுதிக்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-க்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளெனில் ஜூலை 15-குள்ளாகவும் அந்தந்த விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முகாம்வாழ் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்காக விடுதிகளில் தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

சீரான மின் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்ன பட்டாக்காடு கிராமத்தில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

அரியலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

அரியலூா் மாா்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமா் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்த உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகம் தெரியாத நபா்களிடமி... மேலும் பார்க்க

அனுமதியின்றி அடகுக் கடை நடத்தி மோசடி செய்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறையில், உரிய அனுமதி பெறாமல் அடகுக் கடை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செந்துறையை அடுத்த நமங்குணம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கதிா்வேல் ம... மேலும் பார்க்க

இலவச தொழிற்பயிற்சிக்கான நோ்காணல்: வேலைவாய்ப்பற்றோா் கலந்து கொள்ளலாம்

கீழப்பழுவூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கான நோ்காணலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

இடையக்குறிச்சி திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் தேரோட்டம் மற்றும் தீமிதி தி... மேலும் பார்க்க