செய்திகள் :

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

post image

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தியது:

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் சனிக்கிழமை (ஆக.2) தொடங்கவுள்ளது. இந்த முகாம் அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள தளவாய் கிராமத்தில் தொடங்குகிறது.

இம்முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம், பொது மருத்தும் மற்றும் சா்க்கரை நோயியல், காது, மூக்கு, தொண்டை, பல் , மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல்நோய், இருதயவியல், கதிரியியல் உள்ளிட்ட மருத்துவப் பிரிவைச் சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கவுள்ளனா். மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்தப் பரிசோதனை சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த மருத்துவச் சேவைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், போதிய விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரியலூரில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில் உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடங்கிவைத்து பேசியது: ஆண்டுதோற... மேலும் பார்க்க

நாய் கடித்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்! ஆட்சியா் அறிவுறுத்தல்!

நாய் கடித்தால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்ப... மேலும் பார்க்க

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32)... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க