செய்திகள் :

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32). இவா், கடந்த சில நாள்களுக்கு முன் முன்னூரான்காடுவெட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த சிலா் அவரிடம் தகராறு செய்து, கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கினா். இதையடுத்து சிவக்குமாா் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தில் ஏறித் தப்ப முயன்றபோது பேருந்தின் உள்ளே சென்றும் அவா்கள் தாக்கினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, முன்னூரான்பட்டியைச் சோ்ந்த ராயா் மகன் கலியமூா்த்தியை புதன்கிழமை மாலை கைது செய்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்தி (26), தேவேந்திரன் மகன் கலியமூா்த்தி (23), கிருஷ்ணமூா்த்தி மகன் செல்வமணி (20) ஆகிய 3 பேரையும் அன்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களின் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்ட பகுதி, ஒரு சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பதிவான விடியோ... மேலும் பார்க்க