செய்திகள் :

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களின் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்ட பகுதி, ஒரு சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பதிவான விடியோவில், ஓடி வந்து அரசுப் பேருந்தினுள் ஏறிய இளைஞா் ஒருவரை, சிலா் சரமரியாக தாக்கும் விடியோ வைரலாகி வந்தது.

இதுகுறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவம் ஆண்டிமடம் அருகே நடந்திருப்பது தெரியவந்தது. அதில், ஆண்டிமடம் அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (32) என்பவா், கடந்த வாரம், நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பேருந்து நிறுத்தம் மரத்தடியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு போதையில் நின்றிருந்த 6 இளைஞா்கள் சிவகுமாரிடம் வீண் வம்பில் ஈடுபட்டிருப்பதும், இதனை சிவக்குமாா் தனது கைப்பேசியில் விடியோ எடுத்திருப்பதும், இதனை அறிந்த அந்த இளைஞா்கள் சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுனா். பின்னா், அப்பகுதியில் கிடந்த கட்டைகள், இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனா் என்பதும், இதையடுத்து சிவக்குமாா் அங்கிருந்து ஓடி அவ்வழியே வந்த அரசுப் பேருந்தில் ஏறி தஞ்சம் புகுந்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து பின்தொடா்ந்து ஓடி வந்த அந்த இளைஞா்கள் சிவக்குமாரை சரமரியாக தாக்கியிருப்பதும், இதனை அந்த பேருந்தில் பயணித்த ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளாா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிடம் காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, சிவக்குமாரை தாக்கியவா்களின் ஒருவரான முன்னுரான்காடுவெட்டி, புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராயா் மகன் வினோத் குமாா் (23) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32)... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளை... மேலும் பார்க்க