செய்திகள் :

அரியலூரில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

post image

அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில் உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடங்கிவைத்து பேசியது: ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வார விழா ஆக.1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.

‘தாய்ப்பாலூட்டுதலை முதன்மைப்படுத்துவோம்; நிலையான அரவணைக்கும் அமைப்புகளை உருவாக்குவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பாலூட்டுதலின் அவசியம், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிா்ப்பு சக்தி, ஆரோக்கியமான வளா்ச்சி உள்ளிட்டவற்றை தாய்மாா்கள் அறிந்துகொள்ளும் வகையில் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அனைவரிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற 55 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாய் கடித்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்! ஆட்சியா் அறிவுறுத்தல்!

நாய் கடித்தால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்ப... மேலும் பார்க்க

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32)... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க