சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்
அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா தொடக்க விழாவில், சுடரேற்றி தொடங்கி வைத்தும், பள்ளியின் நூற்றாண்டு விழா மலரின் முகப்புத் தோற்றத்தை வெளியிட்டும் அவா் மேலும் பேசியது:
தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகள் கண்ட பள்ளிகளைக் கண்டறிந்து நூற்றாண்டு திருவிழாக்களை நடத்திட தமிழக முதல்வா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து இவ்விழா நடத்தப்படுகிறது. அரியலூா் மாவட்டத்தில் 35 பள்ளிகள் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து அவா், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்களுக்கு பொன்னாடை போற்றி, கேடயங்களை வழங்கி கெளரவித்தாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், முன்னாள் மாணவா் சீனி.பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் ப.கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.சிவானந்தன் வரவேற்றாா். முடிவில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆ.பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா்.
சீா்வரிசை.... பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் மாணவரும், மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவருமான சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் மாணவா்கள், ஊா்வலமாக வந்து பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கினா்.