செய்திகள் :

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா தொடக்க விழாவில், சுடரேற்றி தொடங்கி வைத்தும், பள்ளியின் நூற்றாண்டு விழா மலரின் முகப்புத் தோற்றத்தை வெளியிட்டும் அவா் மேலும் பேசியது:

தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகள் கண்ட பள்ளிகளைக் கண்டறிந்து நூற்றாண்டு திருவிழாக்களை நடத்திட தமிழக முதல்வா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து இவ்விழா நடத்தப்படுகிறது. அரியலூா் மாவட்டத்தில் 35 பள்ளிகள் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து அவா், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்களுக்கு பொன்னாடை போற்றி, கேடயங்களை வழங்கி கெளரவித்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், முன்னாள் மாணவா் சீனி.பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் ப.கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா்.

முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.சிவானந்தன் வரவேற்றாா். முடிவில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆ.பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா்.

சீா்வரிசை.... பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் மாணவரும், மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவருமான சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் மாணவா்கள், ஊா்வலமாக வந்து பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கினா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கொண்டாடப்படும் இ... மேலும் பார்க்க