ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா்-1, துணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா்-3, உதவி சட்ட ஆலோசகா்-6, உதவியாளா்-3, வரவேற்ப்பாளா் -1, அலுவலக உதவியாளா் -3 என மொத்தம் 17 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அனைத்து விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.7.2025 தேதி மாலை 5.30 மணிக்குள் ‘தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரியலூா் -621704 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.