செய்திகள் :

அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்: திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

post image

அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகித்து, அரியலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக கொண்டு சோ்க்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாளை வேலைவாய்ப்பு முகாம்: அரியலூரில் பிரசாரம் தொடக்கம்

பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூ... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு தினம் அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அண்ணாசிலை... மேலும் பார்க்க

ரூ. 500 லஞ்சம்: மின் ஊழியா் கைது

அரியலூா் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவா், தனத... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஜெயங்கொண்டம் பகுதியில் நிறுத்திவைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்... மேலும் பார்க்க

உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை

ஈரோட்டில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த அரியலூா் மாணவிக்கு அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். அரியலூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த முருகன் மகள்... மேலும் பார்க்க