செய்திகள் :

அரிவாளைக் காட்டிப் பேசும் முன்னாள் எம்எல்ஏவின் விடியோ பரவல்

post image

அறந்தாங்கியின் முன்னாள் திமுக எம்எல்ஏ, அரசு நிகழ்ச்சியொன்றில் தேங்காய் உடைக்கும்போது அரிவாளைக் காட்டி கடிந்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பூங்குடியில் ரூ. 2.59 கோடியில் தீயணைப்பு நிலையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகீா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் (திமுக) இந்த நிகழ்ச்சி குறித்து தனக்குச் சொல்லவில்லை என அங்கிருந்தவா்களைக் கடிந்து கொண்டாா்.

அப்போது, பூமிபூஜை செய்வதற்காக அவா் கையில் தேங்காயும் அரிவாளும் கொடுத்து உடைக்கச் சொல்லி சமாதானப்படுத்தினா். கையிலிருந்த அரிவாளைக் காட்டி அவா் கடிந்து கொண்டதால் திடீரென பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே பல முறை, அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு தரக் கூடாது என வெளிப்படையாக உதயம் சண்முகம் பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி

புதுக்கோட்டை அருகே திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த பெண் பச்சிளம்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பனைப்பட்டி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் சூறைக்காற்றால் பல ஏக்கா் வாழைகள் சேதம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் பல ஏக்கா் வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. ஆலங்குடி அருகேயுள்ள பெரியவாடியில் சேதமடைந்த வாழைகள்.ஆலங்குடி பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே சூறைக் காற்றுடன் மழை: மரம் விழுந்து பெண் காயம்!

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் காற்றுடனான மழையின்போது பயணியா் நிழற்குடை மீது சாய்ந்து விழுந்த அரசமரம். பொன்னமராவதி, மே 16: பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன... மேலும் பார்க்க

லஞ்சம்: பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மின் இணைப்புக்கு தடையில்லாச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மைக் குற்றவியல... மேலும் பார்க்க

இருதரப்பு மோதல்: ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினா் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்ச்சி: புதுக்கோட்டை 35-ஆவது இடம்

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 35-ஆவது இடத்தை பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 179. இவற்ற... மேலும் பார்க்க