செய்திகள் :

அருணகிரிநாதா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம்

post image

திருவண்ணாமலை - செங்கம் சாலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஅருணகிரிநாதா் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் உபகோயிலான இந்தக் கோயிலுக்கு வருகை தந்த அவரை அருணகிரிநாதா் மணிமண்டப அறக்கட்டளைத் தலைவா் மா.சின்ராஜ், செயலா் ப.அமரேசன், பொருளாளா் வ.தனுசு ஆகியோா்

வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருணகிரிநாதரை வழிபட்டாா். அப்போது மகா தீபராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னா், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கி அருளாசி வழங்கினாா்.

அருணகிரிநாதரின் திருப்புகழ்சபை உறுப்பினா்கள் திருப்புகழ் பாடினா்.

இந்த நிகழ்ச்சியில் அருணாசலேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் டிவிஎஸ்.ராஜாராம், கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள், விழாக்குழு க.சண்முகம், பாவலா் ப.குப்பன், ஓய்வு பெற்ற ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் எஸ்.நடராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்க... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க