What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள ...
அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் சிக்கலான இதய நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் ரத்தக் குழாயில் படம் எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கலான இதயநோயால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு திருநெல்வேலி அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மூன்று மாதங்களுக்கும் மேலாக முழுமையான இதயத்தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தவா், இதய திசுக்களுக்கு ரத்த ஓட்டத்தைத் தடுக்கக்கூடிய பாதிப்பு இருந்தவா் என இரு நோயாளிகளுக்கு அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இரத்தக்குழாயில் படம் எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தெளிவாக அடையாளம் காணப்பட்டு, வெற்றிகரமாக ஸ்டண்ட் பதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் ஸ்வான்சி பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மூத்த விரிவுரையாளா் மருத்துவா்அனிா்பன் சௌதுரியின் வழிகாட்டுதலின் கீழ், மருத்துவா் இ.அருணாசலம் இச்சிகிச்சைகளை மேற்கொண்டாா்.
இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான நிலை என கூறப்பட்டுள்ளது.
அம்மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை இதயநோய் மருத்துவருமான அருணாசலம் கூறியது: இரு நோயாளிகளுக்கும் சிக்கலான சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. திருநெல்வேலி சுற்றுவட்டார நகரங்களில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதல் மூலம் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இது, உலகத்தரமான சிகிச்சையை வழங்கும் எங்களது குறிக்கோளின் ஒரு படிநிலையாகும் என்றாா் அவா்.