TVK: "நாங்க வந்தாலே கரண்ட் கட் பண்றீங்க; ஏன் பயப்படுறீங்க?" - திமுகவை அட்டாக் செ...
நெல்லையில் பைக் திருட்டு: மூவா் கைது
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வந்தனா்.
விசாரணையில், மாநகரப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த பிரபாகர்ராஜா(28), மாறாந்தையைச் சோ்ந்த சரவணன் (45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை பாளையங்கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து 8 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.