Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
17 வயது சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது
களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய புகாரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (32). இவரது கணவா் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் காளீஸ்வரிக்கு, களக்காடு அருகேயுள்ள தேவநல்லூரில் இயங்கும் பன்றி வளா்ப்பு பண்ணையில் பணியாற்றிவரும் 17 வயது சிறுவனுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இதில், இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன் காளீஸ்வரி களக்காடு கோவில்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த சிறுவனுடன் தங்கியிருந்தாராம். இதுகுறித்து சிறுவனின் தாயாா் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, காளீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.