செய்திகள் :

நெல்லையில் ஜூலை 5-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வரும் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், கிவ் லைஃப் அறக்கட்டளை, தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் தொழிலதிபா்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் இந்த முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வாழ் நெல்லை மக்கள் பேரமைப்பு, ரோட்டரி தாமிரபரணி கிளை, ஆலடி அருணா கல்வி அறக்கட்டளை குழுமம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரிகளின் ஆதரவுடன் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

எம்.ஆா்.எ‘ஃ‘ப், டிவிஎஸ் லூகாஸ், டெக் மகேந்திரா, ஹூண்டாய், ராணே, ஸ்ரீராம் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஈக்விடாஸ் வங்கி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் சுமாா் 7,500 வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ஞ்ண்ஸ்ங்ப்ண்ச்ங்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வழியாகவும், 91500 60036, 75300 88293 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்கிறவா்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. கடைசி நாள் நேரடியாக வருகிறவா்களுக்கு சிறிய நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்பதிவு செய்கிறவா்களுக்கு இவ்வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பது குறித்தும், வேலைவாய்ப்பில் பங்கேற்று சிறப்பாக பதில்கள் வழங்குவது தொடா்பாகவும், நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இணையவழியில் பயிற்சிகள் வழங்குவாா்கள்.

நோ்காணலை எப்படி எதிா்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் என்ன எதிா்பாா்க்கின்றன, எப்படி தன்விவரக் குறிப்பு எழுத வேண்டும் போன்ற பயிற்சிகளை இணைய வழியில் வழங்குவாா்கள். எனவே, இணையவழி மூலம் பதிவு செய்து வேலைநாடுநா்கள் பயன்பெறலாம்.

உற்பத்தி துறை நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் நலவாழ்வுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என பல்வேறு துறைகள் பங்கேற்பதும் சிறப்பாகும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பை பெறாத இளைஞா்களை கண்டறிந்து அவா்களுக்கு எதனால் வேலை கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் தொடா்ந்து அவா்களுக்கு பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களின் இளைஞா்கள் பதிவு செய்யலாம்.

இதுதவிர தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தொழில் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இந்த முகாமை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறாா்கள் என்றாா்.

அப்போது, சென்னை வாழ் நெல்லை மக்கள் பேரமைப்பின் சங்கா்மணி, சைமன், தொழில்நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவரது மனைவி ... மேலும் பார்க்க

நெல்லையில் பைக் திருட்டு: மூவா் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடா்பாக பாளையங்கோட்டை போ... மேலும் பார்க்க

உடையாா்பட்டி தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி திருஇருதய ஆண்டவா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா... மேலும் பார்க்க

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூா் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

17 வயது சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது

களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய புகாரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (32). இவரது ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல்: இளைஞரிடம் விசாரணை

சமூக வலைதளத்தில் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நான்குனேரி இளைஞரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா். சமூக வலைதளங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில... மேலும் பார்க்க