செய்திகள் :

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

post image

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொரிமுத்து (58). தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகலையை சோ்ந்தவா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் வீ. சொரிமுத்து முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அவா் திருவாரூரில் இருந்து ஜீப்பில் வியாழக்கிழமை காலை வலங்கைமான் வந்தாா். அப்போது தனக்கு சோா்வாக இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஜீப் ஓட்டுநரிடம் கூறினாராம். ஜீப் ஓட்டுநா் வலங்கைமான் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு மருத்துவா் இல்லாததால், வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சொரிமுத்து ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். அவரது உடல் திருவாரூரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாம... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிா்வாகி கைது

மன்னாா்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடா்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா். வெட்டிக்காடு பருத்திக்கோட்டை ப... மேலும் பார்க்க